For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உன் புருஷன் வேலைக்கு நான் கியாரண்டி.. ஆசை காட்டி மனைவியுடன் லூட்டி அடித்த டிஎஸ்பி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசை காட்டி லூட்டி அடித்த ஆந்திரா டிஎஸ்பி

    சித்தூர்: திருப்பதியில் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக போலீஸ் டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது.

    சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலிகிரியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிழைப்புத் தேடி ஹைதராபாத் சென்றுள்ளனர்.

    அப்போது தனலட்சுமியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி துர்கா பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனலட்சுமியின் பொளாதார நிலையை நன்கு அறிந்து கொண்டார் துர்கா பிரசாத்.

    நெருக்கம்

    நெருக்கம்

    பின்னர் கணவர் பிரசாத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனால் அவருடன் தனலட்சுமி நெருக்கமாக பழகியுள்ளார்.

    ஆயுதப்படை

    ஆயுதப்படை

    இது நாளடைவில் இருவரும் தகாத உறவு வைக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் துர்கா பிரசாத் அமராவதி அருகிலுள்ள மங்களகிரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து தனலட்சுமியின் குடும்பத்தை திருப்பதியில் வைத்துள்ளார்.

    திட்டம்

    திட்டம்

    அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வைத்துள்ளார். இந்நிலையில் தனலட்சுமியும் துர்கா பிரசாத்தும் அடிக்கடி உல்லாசம் அனுபவிப்பதை கணவர் கண்டுபிடித்துவிட்டார். இதை உறுதிப்படுத்துவதற்காக பிரசாத் ஒரு திட்டத்தை வகுத்தார்.

    திருச்சானூர் போலீஸ்

    திருச்சானூர் போலீஸ்

    இந்த நேரத்தில் நேற்று அதிகாலை தனலட்சுமிக்கு போன் செய்த டிஎஸ்பி திருப்பதியில் உள்ள வீட்டுக்கு வருவதாக கூறினார். இது பிரசாத்தின் காதுகளுக்கு சென்றது. டிஎஸ்பி துர்கா பிரசாத் வீட்டுக்கு வந்து தனலட்சுமியுடன் உல்லாசமாக இருந்த போது திருச்சானூர் போலீஸாரை வீட்டுக்கு வரவழைத்தார் பிரசாத்.

    போலீஸ் வலை

    போலீஸ் வலை

    அப்போது போலீஸ் வருவதை அறிந்த டிஎஸ்பி தப்பியோடிவிட்டார். இதைத் தொடர்ந்து தனலட்சுமியை அழைத்து வந்து திருச்சானூர் போலீஸார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள டிஎஸ்பி துர்கா பிரசாத்தை தேடி வருகின்றனர்.

    English summary
    APSP DSP Pagadala Nagadurga Prasad was caught red-handed with a married woman at Vaishnavi Apartments in Tiruchanur near Tirupati.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X