Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மீது சதி திட்ட வழக்கு.. நீதிமன்றத்தின் பரபரப்பு நிமிடங்கள் இதோ!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர்.

இதனிடையே நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், அத்வானி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதையேற்று நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக சதி திட்ட வழக்கு பதிவு செய்தது லக்னோ நீதிமன்றம். சட்டப்பிரிவு 120 பி-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக நிகழ்ந்த பரபரப்பு காட்சிகள் இவைதான்:

-பாபர் மசூதி இடிப்பு: அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக சதி திட்ட வழக்கு பதிவு

-லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

-சட்டப்பிரிவு 120 பி-ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

-பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானி விடுவிப்பு இல்லை

-சதிதிட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரும் மனு லக்னோ நீதிமன்றத்தில் தள்ளுபடி

-அத்வானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

-பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய கூடாது: அத்வானி மனு

-உமாபாரதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களும் மனு தாக்கல் செய்தனர்

-மனுவை தள்ளுபடி செய்தால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்

-பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்தார் அத்வானி

-உமாபாரதி உள்ளிட்டோர் தரப்பும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது

-அத்வானி உள்ளிட்டோருக்கு ரூ.20,000 பிணை தொகையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது

-அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷிக்கு முன்ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம்

-அத்வானி உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது

-பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரினார் அத்வானி

-முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதியும் ஜாமீன் கோரினர்

-லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் அத்வானி அமர வைக்கப்பட்டுள்ளார்

-முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரும் உடன் அமர்ந்துள்ளனர்

-பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும்

-பாபர் மசூதி வழக்கு 2 வருடங்களுக்குள் விசாரிக்கப்படும்

-தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்பதால் உமா பாரதி அமைச்சர் பதவிக்கு ஆபத்து

-பாஜகவின் குடியரசு தலைவர் பதவி வேட்பாளராக அத்வானியை முன்னிறுத்துவது சந்தேகம்

-லக்னோ சிபிஐ நீதிமன்றம் வந்தடைந்தார் அத்வானி

-முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரும் நீதிமன்றம் வருகை

-சில நிமிடங்களில் நீதிமன்ற நடவடிக்கை தொடங்கும்

-லக்னோ விவிஐபி இல்லத்தில் அத்வானியுடன், முதல்வர் ஆதித்யநாத் சந்திப்பு நிறைவடைந்தது

-இன்னும் சில நிமிடங்களில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி ஆஜராவார் என எதிர்பார்ப்பு

-பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நான் குற்றவாளி என கருதவில்லை-உமா பாரதி பேட்டி

-அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி இன்று காலையில் லக்னோ வருகை

-லக்னோவிலுள்ள விவிஐபி ஓய்வு இல்லத்தில் அத்வானியை சந்தித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்

-பாஜக மூத்த தலைவர்கள் வருகையால் லக்னோ நீதிமன்றத்தில் பல அடுக்கு பாதுகாப்பு

In Babri case, LK Advani, Uma Bharti, MM Joshi in Lucknow court today
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+