வர்தா புயலால் பெங்களூரிலும் நல்ல மழை.. குளிர் வாட்டுகிறது
பெங்களூர்: வர்தா புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி பெங்களூர் ஓரளவுக்கு மழையை பெற்றுள்ளது. மைசூர் உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்கள் நல்ல மழைப்பொழிவை பெற்றுள்ளன.
வர்தா புயல் நேற்று முன்தினம் சென்னையில் கரையை கடந்தது. தரை மார்க்கமாக அது அரபிக் கடலை நோக்கி பயணித்தது. எனவே நேற்று முன்தினம் மாலை முதல் பெங்களூர், மைசூர், ராம்நகர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

பெங்களூரில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு 5.5 செ.மீ என வானிலை இலாகா கூறுகிறது. பெங்களூர் சுற்று வட்டாரத்தில் பொம்மனஹள்ளி மண்டலத்திற்குள் வரும், கொட்டிகெரே பகுதியில்தான் அதிகபட்சமாக 7.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ராம்நகர் மாவட்டத்தின் கக்கலஹள்ளி மாநிலத்திலேயே அதிக அளவு மழைப்பொழிவை பெற்றுள்ளது. குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த மழை ஓரளவுக்கு நிம்மதி தந்துள்ள போதிலும், ஏரிகளில் நீர் மட்டம் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரை பொறுத்தளவில் இன்று வானம் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 80 பாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications