நேற்று வரை கடவுள்... இன்று சாக்கடையில் படங்கள்... குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பக்தர்கள் வெறுப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் புகைப்படங்கள் இப்போது சாக்கடையில் வீசப்பட்டு வருகின்றன. அவரை கடவுளாக கொண்டாடிய பக்தர்கள் இப்போது வ
சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் புகைப்படங்கள் இப்போது சாக்கடையில் வீசப்பட்டு வருகின்றன. அவரை கடவுளாக கொண்டாடிய பக்தர்கள் இப்போது வெறுப்பின் உச்சத்தில் சிங்கின் படங்களைத் தூக்கி எறிந்து வருகிறார்களாம்.
பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 'தேரா சச்சா சவுதா' மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சாமியார் குர்மீத் சிங்கிற்கு உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அரியானா, பஞ்சாப், டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இப்போது ராம் ரஹீம் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன. ஒரு தரப்பினர் அவர் வெளியே வருவதை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

பக்தர்கள் கொந்தளிப்பு
மற்றொரு தரப்பினர் சாமியாரின் புகைப்படங்களை வைத்து வழிபட்டது தவறு என உணர்ந்து அவருடைய புகைப்படங்களை குப்பையில் தூக்கி வீசி வருகிறார்கள். சாமியாரின் உண்மை முகம் தெரியவந்ததை தொடர்ந்து கடும் கோபம் கொண்டு உள்ள ஆதரவாளர்கள் அவர் சம்பந்தப்பட்ட பொருட்களை எல்லாம் குப்பையில் வீசி வருகிறார்கள்.

குப்பையில் கிடக்கும் ராம் ரஹீம்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் ராம் ரஹீம் படங்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. இது பற்றி அந்தப்பகுதி துப்புரவுத்துறை அதிகாரி, தேவேந்திர ரத்தோர் கூறுகையில், " இந்த முறை நான் வழக்கம்போல ஸ்ரீ கங்காநகர் சென்றேன்.

சாக்கடையில் படங்கள்
அங்கு குப்பைகளில் ராம் ரஹீம் போட்டோக்கள் நூற்றுக்கணக்கில் வீசப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடவுள் என யாரை மக்கள் பின்தொடர்ந்தார்களோ அவரது புகைப்படத்தை குப்பையில் வீசிவிட்டனர் என்பதே இப்போதைய நிலை.

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
மீரா சவுக் மற்றும் சுகாதியா பகுதியில் புகைப்படங்கள் வீசியதில், கால்வாய் வடிகாலில் நீர் செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. ராம் ரஹீம், பிறந்த ஊரான குருசார் முந்தியா ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications