ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக வெல்ல வாய்ப்பில்லை: வாக்களிப்பியல் நிபுணர் சந்தீப் சாஸ்திரி
பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் சட்டசபை தேர்தலில் அதிமுக வெல்ல வாய்ப்பு இல்லை என்று வாக்களிப்பியல் நிபுணர் (psephologist) சந்தீப் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் தேமுதிக என்ன முடிவு எடுக்கும்? திமுக- தேமுதிக கூட்டணி அமைந்தால் அதிமுக என்ன வியூகம் வகுக்கும் என பரபரப்பான யூகங்கள், விவாதங்களாக இருக்கிறது.

இந்த தேர்தல் களம் எப்படி இருக்கும்? யார் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு? என்பது குறித்து வாக்களிப்பியல் நிபுணர் சந்தீப் சாஸ்திரி அளித்த பேட்டி:
திமுக- காங்கிரஸ் கூட்டணி தேமுதிக வர வேண்டும் என விரும்புகிறது; பாஜகவும் தேமுதிகவுடன் 3வது அணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் 3-வது அணி உருவானால் அது ஜெயலலிதாவுக்குத்தான் சாதகமாக இருக்கும்.
கேள்வி: திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால்....?
பதில்: தேமுதிகவுடனான கூட்டணி திமுகவுக்கு வலுவான நிலையை கொடுக்கும். அதே நேரத்தில் அதிமுக கடுமையாக போராட வேண்டியிருக்கும். எப்படியாவது தேமுதிகவை கொண்டுவர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது திமுக.
கேள்வி: தமிழகத்தில் பாஜகவுக்கான செல்வாக்கு பற்றி?
பதில்: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு பிரதான கட்சியாக இல்லை. லோக்சபா தேர்தலில் பாஜக நல்ல கூட்டணியை அமைத்தது. அது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். தற்போது நடைபெற இருப்பது சட்டசபை தேர்தல்... இதில் பாஜகவை தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக பார்க்கவில்லை.
கேள்வி: ஜெ. விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால் அது தேர்தலில் எப்படி எதிரொலிக்கும்?
பதில்: மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவரது நிலைமை கடினம்தான்... அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. நீண்டகாலத்துக்கு முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்தவும் முடியாது.
அப்படி அவர் முதல்வர் வேட்பாளராக இல்லையெனில் அதிமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களிக்கவும் மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அனுதாபம் ஏற்பட்டு அது அதிமுகவுக்கு கை கொடுக்கும் என நான் நினைக்கவில்லை.












Click it and Unblock the Notifications