ராஜஸ்தானில் 123 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு... இந்தியாவில் பதிவான மிக அதிக வெப்பம்!
டெல்லி: வட மேற்கு இந்தியாவில் உள்ள பலோடி என்ற நகரில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுதான் இந்தியாவில் இதுவரை பதிவான வெப்ப அளவிலேயே அதிக அளவாகும். இதனால் இந்த நகரம் புதிய சாதனையைப் படைத்த பெருமையைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ளது இந்த பலோடி நகரம். இது ஒரு நகராட்சியாகும். வட மேற்கு இந்தியாவில் ஏப்ரல் மே மாதங்களில் அதிக அளவில் வெயில் அடிக்கும். இதுபோலத்தான் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக உள்ளது.

ஆனால் நேற்று பிற்பகல் இங்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் வெப்பம் பதிவானது. அதாவது 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் இங்கு பதிவாகியுள்ளது. இதை பாரன்ஹீட்டில் சொல்வதானால் 123.8 டிகிரி பாரன்ஹீட்டாகும். இந்த வெப்ப நிலையானது புதிய சரித்திரமாக மாறியுள்ளது.
இதுவரை நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலை 50.6 டிகிரிதான். அதுவும் கூட 1886ம் ஆண்டு பதிவானதாகும். அதன் பிறகு இந்த அளவுக்கு அதிக அளவிலான வெப்ப நிலை இந்தியாவில் எங்குமே பதிவானதில்லை.
இந்தியாவில் கடந்த பல வாரங்களால் பல பகுதிகளில் வெயில் கடுமையாக உள்ளது. நூற்றுக்கணக்கானோர் வெயிலுக்குப் பலியாகியுள்ளனர். வட இந்தியா மற்றும் நேபாளத்திலும் வெயில் கடுமையாக உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கடும் வெயிலுக்கு 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications