சோதனைக்காக இஸ்ரேலுக்குப் போன இந்திய ஏவுகணைகள்.. ஒரு மாதமாக கொரியாவில் தேங்கிக் கிடக்கிறது!
டெல்லி: இந்தியாவின் நீண்ட தூர தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகள் பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு காஸா போர் உக்கிரமடைந்துள்ளதால், தற்போது தென் கொரியாவில் கடந்த ஒரு மாதமாக முடங்கிக் கிடக்கிறதாம்.
மொத்தம் நான்கு LR- SAM ஏவுகணைகளை இந்தியா அனுப்பி வைத்தது. ஆனால் காஸா போர் காரணமாக இஸ்ரேலுக்கு இதை அனுப்ப முடியவில்லை. இதனால் தென் கொரியாவில் இந்த ஏவுகணைகளை பத்திரமாக வைத்துள்ளது இந்தியா.
இந்தியாவின் டிஆர்டிஓவும், இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து இந்த ஏவுகணைகளை தயாரித்துள்ளன. நான்கு ஏவுகணைகளைத் தயாரித்து பரிசோதனைக்காக கடந்த மாதம் இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தனர்.

சியோல் சென்ற ஏவுகணைகள்
கடந்த ஜூலை மாதம் தென் கொரிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் சியோல் சென்றடைந்த நிலையில் காஸாவில் ஜூலை 8ம் தேதி போர் வெடித்தது. இஸ்ரேலின் வெறித் தாக்குதல் தொடங்கியது.

வெடித்தது காஸா போர்
இதையடுத்து சியோல் நகரிலிருந்து டெல் அவிவ் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் தென் கொரிய அரசு ரத்து செய்து விட்டது. இதனால் இந்திய ஏவுணைகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முடக்கம்
இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்த ஏவுகணைகள் சியோலிலேயே முடங்கிப் போயுள்ளன. இதை எப்படி இஸ்ரேலுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்து இந்திய அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

தாமதம்
நான்கு - ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த ஏவுகணைகளை சோதித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் தாமதம் காரணமாக அதைத் தயாரித்து முடிக்க தாதமாகி விட்டது.

காத்திருக்கும் டிஆர்டிஓ
இந்த ஏவுகணைகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான் அடுத்தடுத்து இந்த ரக ஏவுகணைகளைத் தயாரிக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications