போர் மேகம் சூழ்ந்த இந்தியா பாக் எல்லை.. வெறிச்சோடிய வானம்.. ஒரு விமானமும் பறக்கவில்லை
இந்தியா-பாகிஸ்தான் விமான சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஜம்மு: இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் விமானமே பறக்காமல் அந்தப் பிராந்தியமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
நேற்று பதிலடி தந்ததற்கு ஆவேசப்பட்ட பாகிஸ்தான், இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையை காட்ட ஆரம்பித்தது. இதனால் இந்திய விமானப் படையினர் ஊடுருவிய அந்நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.

விமான சேவை
இதன் காரணமாக எல்லையில் தொடர்ந்து பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. மேலும் போர் மூளும் சூழலும் ஏற்பட்டு உள்ளதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் வேலையாக இந்திய பாகிஸ்தான் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டது. மறு மார்க்கத்திலும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டன
குறிப்பாக ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா, குலுமணாலி, பிதாரோகார், பதான்கோட், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆகிய 8 இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.

அச்சம்
இரு நாடுகளும் இப்படி முட்டிக் கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானங்களும் இந்த இரு நாட்டு பக்கம் வர தயங்குவதாகவும், அச்சப்படுவதாகவும் தெரிகிறது. எனவே எல்லைப் பகுதி வான்வெளி போக்குவரத்து இல்லாமல் அமைதியாக உள்ளது.
|
வெறிச்சோடியது
இந்தப் பக்கமாக விமானங்கள் பறக்காமல் வேறு மார்க்கத்தில் திசை திருப்பிவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வானமே வெறிச்சோடி உள்ளது. இதை ஒருவர் ரேடார் படத்துடன் டிவீட் போட்டுள்ளார். பிற்பகல் மணி போல வானம் இப்படித்தான் இருந்தது என்று பதிவிட்டுள்ளார். அதேசமயம், எல்லைப் பகுதியைச் சுற்றிலும் விமானப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல விமானங்கள் சென்று வருகின்றன.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications