காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் மிரட்டல்
டெல்லி: காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கரியவாஸம், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காவிட்டால், அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தக் கூட்டம் இலங்கைக்கானது அல்ல. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தொடர்புடையது. அதில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் இந்திய அரசின் உரிமை.
தமிழக சட்டசபையில் இந்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பது அந்த அரசின் உரிமை. அது குறித்து நான் கருத்துக் கூற முடியாது.
இலங்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சரியான தகவல்களை யாரும் அளிக்கவில்லை என்று கருதுகிறேன். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பது அந்த அமைப்பில் இருந்தே சம்பந்தப்பட்ட நாடு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications