நெல்லுக்கு சொந்தக்காரர்கள் நாம்தான்- சீனாவின் காப்புரிமை முயற்சியை முறியடித்த இந்தியா
டெல்லி: நெற் பயிர் தங்கள் நாட்டில்தான் உருவானது என்று கூறி அதற்கு காப்புரிமை பெற்று சொந்தம் கொண்டாட சீனா மேற்கொண்ட முயற்சியை இந்திய விஞ்ஞானிகள் முறியடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர் நாகேந்திர குமார் தெரிவித்தார். நெற் பயிர் இந்தியாவில்தான் உருவானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின், செடிகளுக்கான உயிரி தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் தலைமை ஆராய்ச்சியாளர் நாகேந்திர குமார் சிங் கூறுகையில், ""நெற் பயிர் இந்தியாவில் உருவானது என்ற உண்மை எங்களது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் "நேச்சர் சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ்" பத்திரிகையில் ஆதாரங்களுடன் நமது விஞ்ஞானிகள் கட்டுரை எழுதியுள்ளனர். இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் நெல் பயிர் வளர்க்கப்பட்டது என்ற கருத்து கடந்த 20ஆம் நூற்றாண்டு வரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது.
இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலுக்கான தேசிய கல்வியகத்தில் 2011ஆம் ஆண்டு சீனா ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவில் நெல் தோன்றியதாக கூறப்பட்டது. மேலும் சீனாவின் யாங்ட்ஸ் பள்ளத்தாக்கில் சுமார் 8,200- 13,500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக நெல் பயிரிடப்பட்டது. அதுவே நெல் பயிரின் தோற்றம் என்று அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய விஞ்ஞானிகள் நெல் பயிர் இந்தியாவில்தான் தோன்றியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர் என்று நாகேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications