பலுசிஸ்தான் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும்: மஸ்தக் தில்ஷாத் பலோச்
டெல்லி: பலுசிஸ்தான் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே'' என்று பலுசிஸ்தான் போராளி மஸ்தக் தில்ஷாத் பலோச் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யூரி ராணுவ முகாமை பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்திய தரப்பு அதிரடியாக செயல்பட்டுள்ளது. இந்திய விமான படை நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
We support such strikes and want Indian Army to conduct surgical strikes in Balochistan as well: Mazdak Dilshad Baloch pic.twitter.com/2kPHZltG0N
— ANI (@ANI_news) September 29, 2016
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அகில இந்திய பலோச் அமைப்பினர் பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பலுசிஸ்தான் போராளி மஸ்தக் தில்ஷாத் பலோச், பலுசிஸ்தான் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் சரியானது என்றும் பலோச் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.