தே.பா. துணை ஆலோசகர் நேச்சல் சந்து திடீர் இலங்கை பயணம்: கோத்தபாய்வுடன் ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சந்து திடீரென இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாயவை கொழும்பில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியா, இலங்கை மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இலங்கை சென்ற நேச்சல் சந்து ராஜபக்சேவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலருமான கோத்தபாயவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருநாட்டு நலன்கள் தொடர்பாக பேச்சுகள் நடந்தது என இலங்கை அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சே டெல்லி ரகசிய பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications