மகளை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்.. இந்திராணியின் மாஜி கணவர் கைது
கொல்கத்தா: மகளை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் மாஜி கணவர் சஞ்சய் கண்ணா மும்பை போலீசாரால் கொல்கத்தாவில், கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த, இந்திராணி முகர்ஜி என்பவர் தனது மகள் ஷீனாவை டிரைவருடன் சேர்ந்து கொலை செய்து வனப்பகுதியில் வீசிய குற்றச்சாட்டின்பேரில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆகஸ்ட் 31ம் தேதிவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சய் கண்ணா கொல்கத்தாவில் வைத்து மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மும்பை அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டுவருகிறார்.
சஞ்சய் கண்ணாவை விவாகரத்து செய்த இந்திராணி தற்போது பீட்டர் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவரிடம் நிருபர்கள் சம்பவங்கள் குறித்து கேட்டதற்கு, இந்திராணிக்கு ஷீனா என்ற மகள் இருந்ததே தெரியாது. எங்கள் திருமணத்திற்கு இந்திராணி வீட்டில் இருந்து ஒரு உறவினர்தான் வந்திருந்தார். இந்திராணி குடும்பத்தை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications