Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஷாக்”.. மிக முக்கிய தகவலை வெளியிட்ட சிபிஐ.. ஒடிசா ரயில் விபத்தில் 288 உயிர்கள் போக இதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

ஒடிசா: பாலசோரில் நிகழ்ந்த கோர ரயில் விபத்துக்கான பிரதான காரணம் என்ன என்று விசாரித்து வந்த சிபிஐ, தற்போது அதனை கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறது.

ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரயில் விபத்து
உலகையே உலுக்கி இருக்கிறது. இருப்பினும் அது குறித்த சர்ச்சைகளும், பரபரப்புகள், செய்திகளும் ஓய்ந்தபாடில்லை. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஸ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்ததது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பேர் பயணித்து இருக்கின்றனர். மற்றொரு பயணிகள் ரயிலான யஷ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. சரக்கு ரயில் ஸ்டேஷனரி பொருட்களை சுமந்து சென்று உள்ளது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஐ தொட்டது. இந்த ரயில் விபத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கிறார்கள். சிலர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் சூழலில், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த சிலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்தவுடன் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர், போலீசாருடன் இணைந்து ஒடிசா மக்களும் களத்தில் இறங்கி உதவிகளை மேற்கொண்டனர். இந்த கோர ரயில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சிபிஐ குழு ரயில் விபத்து நேர்ந்த இடத்திலும், ரயில் நிலையத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலைய கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ரயில் நிலைய அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

Interlocking problem is the major cause of Odisha train accident - CBI

இந்த நிலையில் ஒரு வார விசாரணையின் முடிவில் சிபிஐ ரயில் விபத்துக்கான காரணத்தை வெளியிட்டு உள்ளது. சிபிஐ வெளியிட்ட தகவலின்படி இண்டர்லாக்கிங் எனப்படும் இரட்டை பூட்டுதல் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சனையே ரயில் விபத்துக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் இண்டர்லாக்கிங் அமைப்பு அணைக்கப்பட்டு இருக்கிறது. இண்டர்லாக்கிங் அமைப்பை அணைத்து வைத்து விட்டு ரயில் நிலையத்தின் அதிகாரி பச்சை சிக்னல் கொடுத்ததாலேயே ரயில் விபத்து ஏற்பட்டதாக சிபிஐ முதற்கட்ட தகவலை வெளியிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+