மகா கும்பமேளா போறீங்களா.. தங்குவதற்கு IRCTC செய்த சிறப்பு ஏற்பாடு! உடனே புக் பண்ணுங்க
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் மகா கும்பமேளா வரும் 13ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பிரக்யராஜ் வரும் பக்தர்களுக்கு IRCTC 'கிராம் டென்ட் சிட்டியை' உருவாக்கியிருக்கிறது.
கும்பமேளா நடைபெறும் இடத்திலிருந்து வெறும் 3 கி.மீ தொலைவில் இந்த கூடாராத்தல் ஆன டென்ட் சிட்டி அமைந்திருப்பதால் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவுக்கு சுமார் 50-80 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் தங்குவதற்காக ஐஆரசிடிசி இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. திரிவேணி சங்கமத்திலிருந்து வெறும் 3.5 கிமீ தொலைவில், நைனி, செக்டார்-25 ஆரைல் சாலையில் இந்த டென்ட் சிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐஆர்சிடிசியுடன் சேர்ந்து M/s லல்லூஜி & சன்ஸ் என்கிற தனியார் நிறுவனம் செய்திருக்கிறது.
கழிப்பறைகள், குளியல் அறை, குளிப்பதற்கு சூடான தண்ணீர், படுத்து உறங்குவதற்கு போர்வைகள், கை துண்டுகள் ஆகியவை இந்த குடிசையில் கிடைக்கும். தவிர டிவி வசதியும் இருக்கிறது. அதேபோல, சிசிடிவி கண்காணிப்பு இருப்பதால் கூடுதல் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து தெரிந்துக்கொள்ள 8076025236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமாகும் கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ள முடியும்.

எப்படி முன்பதிவு செய்வது?:
இதற்காக www.irctctourism.com/mahakumbhgram என்கிற இணைய முகவரிக்கு செல்லவும்
அதில் உங்கள் IRCTC ஐடி-யை லாக்-இன் செய்யவும்
ஒருவேளை உங்களிடம் IRCTC ஐடி இல்லையெனில், மொபைல் எண் அல்லது மெயில் ஐடியை வைத்து தற்காலிகமாக guest user-ல் லாக்-இன் செய்ய முடியும்.
லாக்-இன் செய்தவுடன் BOOK NOW என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்
இதனையடுத்து தங்குமிடம் குறித்த விவரங்கள் கேட்கப்படும். அதை நிரப்ப வேண்டும். அதாவது எந்த தேதியில் தங்குகிறீர்கள், எப்போது காலி செய்கிறீர்கள், எத்தனை பேருடன் தங்குகிறீர்கள் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.

பின்னர் நீங்கள் எந்த வகை கூடாரத்தில் தங்க விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். பட்ஜெட்டின் அடிப்படையில் டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் கூடாரங்கள் இருக்கும்.
இதனை தொடர்ந்து, தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும். அதாவது பெயர், முகவரி, மொபல் எண், மெயில் ஐடி, ஒருவேளை நீங்கள் மாற்று திறனாளியாக இருப்பின் அதையும் இந்த ஆப்ஷனில் குறிப்பிட வேண்டும்.

இதற்கடுத்து பணம் செலுத்தும் ஆப்ஷன் வரும். அதாவது டெபிட்/கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங், UPI அல்லது டிஜிட்டல் வாலட்கள் முறைகளில் பணம் செலுத்தலாம்.
கூடாரத்திற்கான கட்டணம் செலுத்தி முடிக்கப்பட்ட பிறகு, முன்பதிவு செய்யப்பட்டதற்கான மின்னஞ்சலை பெறுவீர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications