ரூ.5 லட்சம் டெபாசிட் செய்த சீனியர் சிட்டிசன்கள் அச்சப்பட வேண்டாம்.. ஐடி அபயம்
வங்கிகளில் மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்திருந்தால், விசாரணை கிடையாது என வருமான வரித்துறை சலுகையை அறிவித்துள்ளது.
டெல்லி: 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையில் டெபாசிட் செய்திருந்தால், விசாரணை இல்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
உயர மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து பலர் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்ததை கண்ட வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இரண்டரை லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்தவர்களை கண்காணித்த வருமான வரித்துறை அவர்களை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
அதே நேரத்தில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை டெபாசிட் செய்திருந்தால், தொடர் சரிபார்ப்பு நடவடிக்கைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அவற்றை டெபாசிட் செய்ய வழங்கப்பட்ட அவகாச காலத்தில் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை டெபாசிட் செய்த ஒவ்வொருவரையும் நாங்கள் விசாரணை செய்யப்போவதில்லை. ஆகையால் யாரும் பீதி அடைய வேண்டாம்.
அந்த வகையில், உச்சவரம்பு நிர்ணயித்து அது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு வருமான வரித்துறையினருக்கு தெளிவான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இது சரிபார்க்கத்தானே தவிர, ஆய்வு செய்வதற்கோ அல்லது அளவீடு செய்வதற்கோ அல்ல.
70 வயதுக்கு உட்பட்ட குடிமக்கள் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தால், அவர்கள் வருமான வரித்துறை இணையதளத்துக்கு போய் டெபாசிட் குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டும். இந்த டெபாசிட்டுகள் முந்தைய வருமான வரி கணக்குடன் ஒத்துபோகிறபோது, இந்த விவகாரம் முடித்துக்கொள்ளப்படும்.
அதே நேரத்தில் டெபாசிட்தாரர் சரி பார்க்காவிட்டால் அல்லது வருமானத்துக்கும் டெபாசிட்டுக்கும் ஒத்துபோகாவிட்டால், அவர்களிடம் கூடுதல் விளக்கம் கேட்கப்படும்.
அதே நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு (வரி செலுத்துபவர்கள்) இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சம் ஆகும். அவர்களது டெபாசிட்டுகளுக்கான ஆதாரம், சிறுசேமிப்பு, கடந்த கால வருவாய் சேமிப்பாக இருக்க வேண்டும். வேறு ஏதாவது தொழில் செய்து வருமானம் வராமல் இருக்கவேண்டும்.
இந்த டெபாசிட் பிரச்சினையில் பொதுவாக யாருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல், விளக்கம் கேட்கப்படும் என்றார் அவர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications