சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முகாமிட்ட இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் முகாம் மீது நேற்று மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். ஆனால் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் பதிலடி கொடுத்து மாவோயிஸ்டுகளின் தாக்குதல் முயற்சியை முறியடித்தனர்

சத்தீஸ்கரின் ரானாபால் அருகே கொண்டகான் கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசாரின் 41-வது பட்டாலியன் முகாம் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக இங்கு அவர்கள் முகாமிட்டுள்ளனர்.

அப்பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த போலீசார் அங்கு முகாமிட்ட நிலையில் அப்பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மாவோயிஸ்டுகள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 12.40 மணியளவில் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அம்முகாமை சுற்றி வளைத்து உக்கிரமான தாக்குதலை நடத்தினர். ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். வெவ்வேறு திசைகளில் இருந்து இந்த தாக்குதலை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டனர்.

இதற்கு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் சரியான பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே 3 மணிநேரம் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதன் பின்னர் தாக்குப் பிடிக்க முடியாத மாவோயிஸ்டுகள் காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.
இம்மோதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மாவோயிஸ்டுகள் விட்டுச் சென்ற 4 ராக்கெட் லாஞ்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்தும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications