Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவேசமான ஜெகன்.. புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் அலுவலகம்! அலறும் ஆந்திரா

Subscribe to Oneindia Tamil

அமராவதி: முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் அமராவதி அருகே அமைந்திருந்தது.. அந்த கட்டிடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததால் அது இடிக்கப்பட்டது. இது ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

jagan mohan reddy andhra

தெலுங்கு தேசம் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்ட ஜனசேனா 21 இடங்களில் வென்றது. இதையடுத்து அக்கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

வன்முறை: ஆந்திராவில் தேர்தல் முடிவுகள் வெளியான உடன் அங்குப் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இடங்களில் வன்முறை நிகழ்வுகள் நடந்தது. அங்குள்ள ஜெகன் கட்சி நிர்வாகிகளின் வீடுகளைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடந்தன. இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஓயவே சில வாரங்கள் ஆனது.

அமராவதி அருகே தடேபள்ளியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சி மத்திய அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்ததாகப் புகார்கள் எழுந்தன. அந்த கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், அது ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த ஒய்.எஸ்.ஆர். கட்சி மத்திய அலுவலகத்தையும் புல்டோசர்கள் மூலம் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடும் கண்டனம்: இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டி இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் சந்திரபாபு நாயுடு இதுபோல நடந்து கொள்வதாக அவர் சாடியுள்ளார். இந்த கட்சி அலுவலகத்தின் மீதான ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், கட்டிடத்தை அதிகாரிகள் இடித்தது தவறான செயல் என சாடியுள்ளனர்.

இது தொடர்பாக ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மிக மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். தடேபள்ளியில் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை புல்டோசர் கொண்டு ஒரு சர்வாதிகாரி இடித்துத் தள்ளி இருக்கிறார்.

பயப்பட மாட்டோம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஆந்திராவில் தேர்தலுக்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சி எப்படி இருக்கும் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பயந்துவிடாது.

நாங்கள் மக்கள் சார்பாக மக்களுக்காகப் போராடுவோம். சந்திரபாபுவின் இந்த மிக மோசமான செயலை நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயகவாதிகளும் கண்டிக்க வேண்டும்" என்று அவர் சாடியுள்ளார்.

ஹைதராபாத் இல்லம்: முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள லோடஸ் பாண்ட் பகுதியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான இல்லத்தின் ஒரு பகுதியும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஜெகனின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கும் அறை நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்த நிலையில், அதை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+