ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. ஸ்ரீநகரில் அதல பாதாளத்திற்கு போன வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையத்தின் டேட்டா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காஷ்மீரில் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 15 தொகுதிகளும் அடங்கும். பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பெல் ஆகிய பகுதிகளில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வாக்குப்பவு சதவிகிதம் இருந்தது. ஆனால், ஸ்ரீநகரில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த மாநிலம் காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

முதல்கட்ட தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், நேற்று 2 வது கட்ட தேர்தல் நடந்தது. 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. 3 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு நடந்த 6 மாவட்டங்களில் ஜம்மு பிராந்தியத்தில் 3 மாவட்டங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களும் அடங்கும்.
காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. வாக்குப்பதிவு நேற்று மாலை முடிந்த நிலையில், 57.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ரேசாய் பகுதியில் 74.70 சதவிகித வாக்குகளும் குறைந்தபட்சமாக ஸ்ரீநகரில் 29.81 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. பட்காம் மாவட்டத்தில் மக்கள் விறுவிறுப்புடன் வாக்களித்ததை காண முடிந்தது. ஆனால் ஸ்ரீநகரில் காலையில் இருந்தே வாக்குச்சாவடிக்ள் வெறிச்சோடி கிடந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஸ்ரீநகரில் 27.77 சதவிகித வாக்குகளும் கந்தர்பேல் மற்றும் பட்காம் மாவட்டத்தில் முறையே 73.11 மற்றும் 67.21 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்து இருந்தாலும், 2024 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்துள்ளது. பட்காம் தொகுதியில் உமர் அபதுல்லாவுக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முந்தாசிர் மெஹ்திக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. உமர் அப்துல்லா கந்தர்பெல் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
-
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications