முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா?
ஸ்ரீநகர்: முதல்முறையாக மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை சந்திக்கும் அனந்தநாக் மாவட்டத்தில் பெண் வேட்பாளர் காலிடா பீபீயால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என வாக்காளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 296 வேட்பாளர்களில் 89 பேர் பெண்கள்.

லார்னூவில் 25 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 143 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க பல்வேறு வாகனங்களில் மக்கள் வந்துள்ளனர். இந்த தொகுதியானது எஸ்டி பிரிவினருக்கானது. இதில் பிஏஜிடி முன்னணியின் வேட்பாளர் காலிடா பீபீ போட்டியிடுகிறார்.
பள்ளத்தாக்கு பகுதிகளில் 140 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்த நிலையில் இதுவரை ஒரு வேட்பாளரும் அக்கட்சி சார்பில் களமிறக்கப்படவில்லை. முதல் முறையாக வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பீபீயின் வீடு முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியது.
இந்த பீபீயின் கணவர் குல்சர் அகமது கடானா, இவர் மெஹபூபா கட்சி தொண்டர். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முக்கிய பிரச்சினைகளாக சாலைகள், மின்சாரம், மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன.
முதல்முறையாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனந்தநாக்கில் ஸ்ரீநகர் முதல் லார்னூ வரை 120 கி.மீ. தூரத்திற்கு வரை தேர்தலுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
ஆனால் தண்டிபோரா கிராமம் வந்தவுடன் அங்கு ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் வேட்பாளரின் பெயர் காலிடா பீபீ என உள்ளது. அதில் பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications