காஷ்மீர் எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்.. 1 மணி நேரமாக தொடர்ந்து தாக்குதல்.. பதற்றம்!
இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறது.
Recommended Video

ஸ்ரீநகர்: இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைக்கு இப்போதைக்கு சரியாவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவரும் பாகிஸ்தான் இன்னொரு புறம் எல்லையில் தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் தாக்கியது
சரியாக 6 மணிக்கு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. உயர் ரக துப்பாக்கிகள் மூலம் இந்திய துருப்புகளை நோக்கி, பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. தொடர்ந்து விடாமல் பாகிஸ்தான் ராணுவம் தாக்கிக் கொண்டே இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் அங்கு குவிக்கப்பட்டது.

இந்தியா பதிலடி
இதையடுத்து இந்தியாவும் திருப்பி தாக்க தொடங்கியது. இந்திய ராணுவமும் திருப்பி தாக்கியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கடுமையான தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது.

மோசம்
இந்த சம்பவம் காஷ்மீரின் கிருஷ்ணகாதி எனப்படும் பூன்ச் அருகே உள்ள கிராமத்தில் நடந்தது. இந்த தாக்குதல் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. அங்கிருந்த மக்கள் நேற்றே வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுத்தப்பட்டது
அதிகாலை 6 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. 7.10 மணிக்கு தாக்குதல் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய தரப்பில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது பாதுகாப்பு கருதி இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications