Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த காஷ்மீர் மக்களுக்கு ரூ,10 லட்சம்.. CM உமர் அப்துல்லா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதனால் ஆடிப்போன பாகிஸ்தான் செய்வது அறியாமல் வழக்கம் போல் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. பீரங்கி குண்டுகளை வைத்து காஷ்மீர் எல்லையோரத்தில் இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

Omar Abdullah

இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பல விமான தளங்கள் அழிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவிடம் கெஞ்சி கூத்தாடிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதனை அடுத்து அமெரிக்க அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் உறவினர்களை கட்டி அணைத்த உமர் அப்துல்லா, அரசு எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். இ

தனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் நிதி உதவி அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிதலமைந்த பகுதிகளை நேரில் சென்று உமர் அப்துல்லா பார்வையிட்டார்.

எல்லையில் பதற்றம் தணிந்த பிறகு பாதுகாப்பு முகாமில் உள்ளவர்கள் அவர்களுடைய சொந்த இடத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்திய நிலையில், அதன் பாகங்கள் பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறது. இந்த சிதறி கிடக்கும் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என உள்ளூர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற பாகங்களை எங்கேயாவது கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+