ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்- பீகார் தொழிலாளர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 3 பீகார் மாநில தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தற்போது வரை அரசியல் நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் வெளி மாநிலத்தவரும் வாக்காளர்களாக முடியும் என்கிற நிலைமை உருவானது. அப்போதே, வெளி மாநிலத்தவரை குறிவைத்து தாக்குடல் நடத்துவோம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெளி மாநில தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இத்தகைய தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரை குறிவைத்து ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அன்மோல் குமார், பிந்து தாக்கூர், ஹெராலால் யாதவ் ஆகியோர் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 3 பேரும் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
J&K | Terrorists fired upon three outside labourers in Shopian district late Thursday evening. All the injured are admitted to SMSH Hospital, Srinagar.
— ANI (@ANI) July 14, 2023
The injured persons are Anmol Kumar, Pintu Kumar Thakur and Heralal Yadav, all residents of District Supaul, Bihar. pic.twitter.com/aab95Ep9Xl
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications