ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்- பீகார் தொழிலாளர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 3 பீகார் மாநில தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தற்போது வரை அரசியல் நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 370-வது பிரிவு நீக்கப்பட்டதால் வெளி மாநிலத்தவரும் வாக்காளர்களாக முடியும் என்கிற நிலைமை உருவானது. அப்போதே, வெளி மாநிலத்தவரை குறிவைத்து தாக்குடல் நடத்துவோம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெளி மாநில தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இத்தகைய தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரை குறிவைத்து ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அன்மோல் குமார், பிந்து தாக்கூர், ஹெராலால் யாதவ் ஆகியோர் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 3 பேரும் பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
J&K | Terrorists fired upon three outside labourers in Shopian district late Thursday evening. All the injured are admitted to SMSH Hospital, Srinagar.
— ANI (@ANI) July 14, 2023
The injured persons are Anmol Kumar, Pintu Kumar Thakur and Heralal Yadav, all residents of District Supaul, Bihar. pic.twitter.com/aab95Ep9Xl
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications