சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி குமாரசாமி கேட்ட 10 கேள்விகள்; பதில் சொல்லாத பவானிசிங்
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்வியால் பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 34வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதம் நடைபெற்று வருகிறது.

கேள்விகளை அடுக்கிய நீதிபதி
கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி, நீதிபதி பவானிசிங்கிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஜெயலலிதா வழக்கின் அடிப்படைத் தன்மை என்ன என்பதாவது தெரியுமா எனவும் கேட்டார்.
போயஸ்தோட்டம்
வழக்குகாலத்துக்கு முன்பே ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் வாங்கப்பட்டுள்ளது. போயஸ் தோட்டத்தை சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்த்தது ஏன் என்றும் கேட்டார்.
பணப்பரிவர்த்தனை ஆதாரம்
ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றும், எந்தெந்த தேதியில் எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்தது என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்ற பவானி சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.
பினாமிகளா?
மேலும், சசிகலா உள்பட 3 பேர் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்றும் வினா எழுப்பிய நீதிபதி, பினாமி சட்டப்படி வழக்கு தொடராமல் சொத்து குவிப்பு என வழக்கு ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பதில் தராத பவானிசிங்
நீதிபதி குமாரசாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார். தாம் கேட்ட 10 கேள்விகளுக்கும் பவானி சிங் பதில் தராததால் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நல்லமநாயுடுவின் பதில்
போயஸ் இல்லம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசிடம் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். போயஸ் இல்லத்தை அழகுப்படுத்த ரூ. 7 கோடி செலவிடப்பட்டதே வழக்கில் போலீசார் சேர்த்து உள்ளனர். நல்லநாயுடுவின் சாட்சிய பதிவை முழுமையாக படிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications