ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் மனுவில் குளறுபடி- கர்நாடகா சட்டத்துறை இன்று அவசர ஆலோசனை!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் கோரியுள்ள விளக்கம் குறித்து ஆராய்வதற்காக கர்நாடகா சட்ட அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடந்த மே 11-ந் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கர்நாடகா அரசு 'நீண்ட இழுபறி'க்குப் பின்னர் முடிவு செய்தது.

இதனடிப்படையில் கடந்த மாதம் 23-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இம்மனு இருந்தது.
இதில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பின் குளறுபடிகள் பிரதான அம்சமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனிடையே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு அப்பீல் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்நிலையில் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் சில ஆவணங்கள் விடுபட்டுள்ளதாகவும் அது தொடர்பான விவரங்களை தருமாறும் திடீரென உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. மிக முக்கியமான அப்பீல் மனுவில் எப்படி சில ஆவணங்கள் விடுபட்டன? என்ற பரபரப்பான கேள்வியும் எழுந்தது.
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கின் கர்நாடகா அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவோ, பொதுவாக வழக்குகளில் இதுபோன்ற விளக்கங்கள் கோரப்படுவது வழக்கமான ஒன்றுதான் என சமாளித்திருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் கோரியுள்ள ஆவணங்களை கர்நாடகா தாக்கல் செய்த பின்னர் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக கர்நாடகா சட்ட அமைச்சகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அப்பீல் மனுவில் முக்கிய ஆவணங்கள் விடுபட்டது எப்படி? இதற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications