பணம் பெற்றுக் கொண்டு விளையாடிய சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருதா?: ஐ. ஜ.தளம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி.

நேற்று முன் தினம் தனது கடைசிப் போட்டியை ஆடினார் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். அதனைத் தொடர்ந்து முன்பு அளித்த வாக்குறுதியின் படியே, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழக்க இருப்பதாக அறிவித்தது மத்திய அரசு.

ஆனால், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி. இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது..

விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின்

விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின்

‘கிரிக்கெட் விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின். இவர் காசு வாங்கிக் கொண்டுதான் இத்தனை காலம் விளையாடினார். அவருக்குப் போய் பாரத ரத்னா விருது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

இவரை விட தகுதியானவர்கள் பலர் உள்ளனரே

இவரை விட தகுதியானவர்கள் பலர் உள்ளனரே

இவரை விட தகுதியான மிகச் சிறந்தவர்கள் இந்த விருதுக்கும், கெளரவத்திற்கும் தகுதியான பலர் உள்ளனர்.

கேலிக்கூத்தாக்கி விட்டனர்

கேலிக்கூத்தாக்கி விட்டனர்

பாரதரத்னா விருதே கேலிக்குரியதாக மாறி விட்டது. இதை ஒழிக்க வேண்டும். அதற்கு இப்போது முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது.

ஓசியில் விளையாடவில்லை சச்சின்

ஓசியில் விளையாடவில்லை சச்சின்

ஓசியில் விளையாடவில்லை சச்சின். பல கோடி பணத்தை விளையாடி சம்பாதித்தவர் அவர்.

தியான் சந்த்துக்கு ஏன் தரவில்லை...

தியான் சந்த்துக்கு ஏன் தரவில்லை...

தியான்சந்த்துக்கு ஏன் இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்படவி்லை. இதை அரசு விளக்க வேண்டும்' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+