பீகார் வரை பற்றி எரிந்த ஆளுநர் ரவியின் ஆக்ஷன்.. ஸ்டாலினுக்கு ஆதரவாக மல்லுக்கு வந்த ஐக்கிய ஜனதாதளம்!
பாட்னா: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க முடிவெடுத்த ஆளுநருக்கு பீகாரில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுநர் ரவியின் முடிவை ஆட்சேபித்துள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து, ஆளுநர் தனது உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜேடியு கண்டனம்: இதற்கிடையே, ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தன. ஆளுநருக்கு இதற்கு அதிகாரமே இல்லை என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்பட்டது. அகில இந்திய அளவிலும் இந்த விவகாரம் பேசப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.எல்.சியுமான நீரஜ் குமார் கூறுகையில், "அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் பதிவு செய்துள்ள வழக்குகளில் அவர் இன்னும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது அவரது பதவி நீக்கம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என குற்றம்சாட்டினார்.
ம.பியில் ஏன் செய்யல?: மேலும், "தமிழக அமைச்சர் பாஜகவுக்கு எதிரான கட்சி என்பதால் ஆளுநர் இந்த நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். வியாபம் ஊழல் விவகாரத்தில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கும்போது ஏன் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அங்கு பாஜகவுக்கு எதிரான கூட்டணிகளின் ஒன்றிணைவு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஆளுநரின் நடவடிக்கைக்கு முதல் குரலாக ஐக்கிய ஜனதா தளம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications