நடிகை ரோஜா வீட்டில் திருட்டு.. ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ்!
நடிகை ரோஜா வீட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடுப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: நடிகை ரோஜா வீட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடுப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் திரைப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணி ஆவர்.

நடிகை ரோஜா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். அரசியளிலும் ஈடுபட்டுள்ள அவர் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஆவர்.
நடிகை ரோஜாவுக்கு ஹைதராபாத்திலும் வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகை ரோஜாவின் வீட்டிலிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த நகை திருடு போனது குறித்து காவல்நிலையத்தில் நடிகை ரோஜா புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ வீட்டில் நகை திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications