ஜார்க்கண்ட் சிறையில் இருந்து பீகார் நிதிஷ் ஆட்சி கவிழ்ப்புக்கு லாலுபிரசாத் சதி?விசாரணைக்கு உத்தரவு
ராஞ்சி: ராஞ்சி சிறையில் இருந்து தொலைபேசி மூலமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க லாலு பிரசாத் சதி செய்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சி அமைந்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகி உள்ளார். பீகார் சட்டசபையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக எம்.எல்.ஏ. விஜய்சின்ஹா வெற்றி பெற்றார். ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் அவாத் பிகாரி சவுத்ரியை வேட்பாளராக நிறுத்தி இருந்தன.

பீகார் சபாநாயகர் தேர்தல்
சபாநாயகர் தேர்தலின் போது பீகார் சட்டசபையில் பெரும் அமளியே ஏற்பட்டது. பீகார் எம்.எல்.சி.க்கள் சட்டசபையில் இருந்ததை சுட்டிக்காட்டி ஆர்ஜேடி கூட்டணியில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் விஜய் சின்ஹா வென்றார்.

லாலு பேரம்
இதனிடையே பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் தொலைபேசி மூலம் பாஜக எம்.எல்.ஏக்களை பேரம் பேசி நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார் என கூறியிருந்தார்.

கொரோனா காரணம்
சபாநாயகர் தேர்தலின் போது வாக்கெடுப்பில் கொரோனாவை காரணம் காட்டி பங்கேற்காமல் தவிர்த்துவிடுங்கள் எனவும் லாலு பிரசாத் பேரம் பேசினார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான ஆடியோ ஒலிப்பதிவுகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதேபோல் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியும் லாலு தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சி கவிழ்ப்பு குறித்து பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார்.

என்னை தொடர்பு கொண்ட லாலு- மஞ்சி
இது தொடர்பாக ஜிதன்ராம் மஞ்சி கூறுகையில், இரவு 11 மணியளவில் லாலு பிரசாத் என்னிடம் தொலைபேசியில் பேச முயன்றார். ஆனால் நான் பேசவில்லை. சுஷில்குமார் மோடியும் பாஜக எம்.எல்.ஏ. லாலன் பாஸ்வானும் சொல்வது 200% உண்மை என அடித்து சொன்னார். இந்த நிலையில் பீகாரில் நிதிஷ்குமார் அரசை கவிழ்க்க லாலு பிரசாத் சிறையில் இருந்து தொலைபேசி மூலம் சதி செய்தாரா? என்பது குறித்து விசாரிக்க ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications