ஜார்க்கண்ட் சிறையில் இருந்து பீகார் நிதிஷ் ஆட்சி கவிழ்ப்புக்கு லாலுபிரசாத் சதி?விசாரணைக்கு உத்தரவு
ராஞ்சி: ராஞ்சி சிறையில் இருந்து தொலைபேசி மூலமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க லாலு பிரசாத் சதி செய்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சி அமைந்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகி உள்ளார். பீகார் சட்டசபையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக எம்.எல்.ஏ. விஜய்சின்ஹா வெற்றி பெற்றார். ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் அவாத் பிகாரி சவுத்ரியை வேட்பாளராக நிறுத்தி இருந்தன.

பீகார் சபாநாயகர் தேர்தல்
சபாநாயகர் தேர்தலின் போது பீகார் சட்டசபையில் பெரும் அமளியே ஏற்பட்டது. பீகார் எம்.எல்.சி.க்கள் சட்டசபையில் இருந்ததை சுட்டிக்காட்டி ஆர்ஜேடி கூட்டணியில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் விஜய் சின்ஹா வென்றார்.

லாலு பேரம்
இதனிடையே பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் தொலைபேசி மூலம் பாஜக எம்.எல்.ஏக்களை பேரம் பேசி நிதிஷ்குமார் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார் என கூறியிருந்தார்.

கொரோனா காரணம்
சபாநாயகர் தேர்தலின் போது வாக்கெடுப்பில் கொரோனாவை காரணம் காட்டி பங்கேற்காமல் தவிர்த்துவிடுங்கள் எனவும் லாலு பிரசாத் பேரம் பேசினார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான ஆடியோ ஒலிப்பதிவுகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதேபோல் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியும் லாலு தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சி கவிழ்ப்பு குறித்து பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார்.

என்னை தொடர்பு கொண்ட லாலு- மஞ்சி
இது தொடர்பாக ஜிதன்ராம் மஞ்சி கூறுகையில், இரவு 11 மணியளவில் லாலு பிரசாத் என்னிடம் தொலைபேசியில் பேச முயன்றார். ஆனால் நான் பேசவில்லை. சுஷில்குமார் மோடியும் பாஜக எம்.எல்.ஏ. லாலன் பாஸ்வானும் சொல்வது 200% உண்மை என அடித்து சொன்னார். இந்த நிலையில் பீகாரில் நிதிஷ்குமார் அரசை கவிழ்க்க லாலு பிரசாத் சிறையில் இருந்து தொலைபேசி மூலம் சதி செய்தாரா? என்பது குறித்து விசாரிக்க ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications