சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை: காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கடும் எதிர்ப்பு!!
டெல்லி: சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்; குறிப்பாக இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. இதன் மூலம் இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் மத்திய அரசின் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இந்தியா என்பது பல மதங்கள், மொழி பேசுகிற நாடு. இங்கு ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று" என்று ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications