குற்றவாளிகளுக்கு அனுதாபமோ கருணையோ காட்டாமல் தண்டனை விதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: குற்றச்செயல்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு தண்டனைக் காலம் விதிக்கும் போது எவ்வித அனுதாபமும் காட்டாமல் உரிய தண்டனையை நீதிமன்றங்கள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேச சாலை விபத்தில் மரணத்தை ஏற்படுத்திய குற்றவாளி ஒருவருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை அம்மாநில உயர்நீதிமன்றம் குறைத்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எம்.ஒய். இக்பால் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு:
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் போது நீதித்துறை அனுதாபம் காட்டக் கூடாது. அது நீதித்துறை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பதுடன் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை தகர்த்துவிடும்.
குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை காலத்தை வழங்குவது நீதிமன்றங்களின் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்காமல் போனால் பழிவாங்கும் போக்குக்குத்தான் அது வழிவகுக்கும்.
என்ன மாதிரியான குற்றம் செய்யப்பட்டுள்ளதோ அதற்கு உரிய தண்டனையை நீதிபதிகள் அவசியம் வழங்கித்தான் ஆக வேண்டும். இதனால் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் விஷயத்திலும் இப்படி கறாராக இருந்தால் எப்படி இருக்கும்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications