"ரெட்" போட்டதும் "சிக்னலில்" நிற்காவிட்டால் ரூ.15,000 அபராதம்: வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்
டெல்லி: புதிய போக்குவரத்து சட்டத்தின்படி சிக்னலில் சிவப்பு விளக்கு எரிகையில் நிற்காமல் சென்றால் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டி வரும்.
சாலை விதிமீறல்கள், விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய போக்குவரத்து சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சட்டத்தின்படி தண்டனை கடுமையாக இருக்கும்.
புதிய சாலை போக்குவர்தது மற்றும் பாதுகாப்பு சட்டம் 2014ன்படி அபராதங்கள் 3ல் இருந்து 50 மடங்கு அதிகரக்கப்பட்டுள்ளது.

அதிவேகம்
அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு தற்போது ரூ.400 முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவே புதிய சட்டத்தின்கீழ் ரூ.5,000 முதல் ரூ.12,500 அபராதமும், 8 வாரங்கள் வரை ஓட்டுநர் உரிமம் ரத்தும் செய்யப்படும்.

மது
குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கினால் தற்போது ரூ.3,000 அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய சட்டத்தின்படி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.15,000 அபராதமும், ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறை போதையில் சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

பேருந்து ஓட்டுநர்கள்
பேருந்து ஓட்டுநர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.50,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இந்த அபராதம், தண்டனை தவிர்த்து 25 வயதுக்குட்டப்பட்ட ஓட்டுநர்களின் உரிமம் 3 மாதங்கள் ரத்து செய்யப்படும்.

சிக்னல்
சிக்னலில் சிவப்பு விளக்கு எரிகையில் நிற்காமல் சென்றால் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை அபராதமும், ஓட்டுநர் உரிமம் ஒரு மாதம் ரத்தும் செய்யப்படும். மேலும் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.

குழந்தை
விபத்து ஏற்படுத்தி குழந்தை இறக்க காரணமாக இருந்தால் ரூ.3 லட்சம் அபராதமும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். பதிவு எண் இல்லாத வாகனத்தை ஓட்டினால் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

நாடாளுமன்றம்
இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு அது வரும் குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications