ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி செய்துள்ள காரியத்தை பாருங்க... ஆச்சரியம்தான் போங்க!
டெல்லி: கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சநீதிமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டது நீதிபதி குரியன் ஜோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் கடவுளின் தாய் வீடான அந்த மாநிலமே வெள்ளக்காடானது. அந்த மாநிலத்தில் 19,512 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது.
மக்கள் தங்கள் உடைமைகளையும் வீட்டையும் இழந்தனர். தற்போது அடுத்த வேளை உணவுக்காக ராணுவ ஹெலிகாப்டர்களை நோக்கி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

நிதியுதவி
கேரள மக்களுக்காக மற்ற மாநிலத்து மக்கள் தாராளமாக நிதியுதவியை செய்து மாநிலம் பழைய நிலைக்கு திரும்ப உதவி புரியுங்கள் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒருங்கிணைப்பு
இதையடுத்து கேரள மாநிலத்துக்கு மற்ற மாநில அரசுகளும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகிறது. பல்வேறு மக்களிடம் இருந்து நிவாரண பொருட்களை பெற்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைத்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி மக்களும்
அது போல் டெல்லியில் உள்ள மக்களும் கேரளாவுக்காக நேற்று நிவாரண பொருட்களை சேகரித்தனர். மேலும் சில வழக்கறிஞர்கள் மூலம் நிவாரண பொருட்களை சேகரித்து அதை உரிய முறையில் பேக்கிங் செய்ய தன்னார்வலர்கள் தேவை என்று சமூகவலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தனர்.

என்ன நிவாரணம்
இதையடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் 7 லாரிகள் நிறைய நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதில் பால்புட்டிகள், துணிகள், செருப்புகள், பாத்திரங்கள், சானிட்டரி நாப்கின்கள், தண்ணீர் பாட்டில்கள், முக்கியமான மருந்துகள், அரிசி, பருப்பு மற்றும் பிஸ்கெட் ஆகியன இருந்தன.

பேக்கிங் செய்தார்
அப்போது அங்கு முதல் ஆளாக வந்தார் நீதிபதி குரியன் ஜோசப். இவர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து அட்டைபெட்டிகளுக்கு லேபிள் ஒட்டியது மற்றவர்களுக்கு ஊக்கமளித்தன. இதைக் கண்ட மற்றவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் நள்ளிரவு வரை இந்த பணிகளை மேற்கொண்டார். குரியன் ஜோசப்புக்கு எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காலாடிதான் சொந்த ஊராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications