உலககோப்பை கபடி: இறுதிப் போட்டியில் இந்திய அணி !
ஆமதாபாத்: உலககோப்பை கபடியின் அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 73-20 என வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் 3வது உலககோப்பை ஆண்கள் கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன.

காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 36-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. இறுதியில் 73-20 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டியில் ஈரான் மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.
முதல் பாதியில் தென் கொரியா அணி 13-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. இருப்பினும் இரண்டாவது பாதியில் நேர்த்தியாக ஆடிய ஈரான் அணி 28-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி தனதாக்கியது.
இதனையடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஈரானை எதிர்கொள்கிறது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இந்த முறையும் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications