ஜார்க்கண்டின் கண்டே தொகுதியில் அபாரம்! கல்பனா சோரனுக்கு காத்திருக்கிறதா பம்பர் பரிசு?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கணவர் ஹேமந்த் சோரனுக்கு அரசியலில் உருதுணையாக இருந்து வரும் அவருடைய மனைவியும் சிபு சோரனின் மருமகளுமான கல்பனா சோரன் , நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கண்டே தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் மற்றும் கடைசி கட்டமாக 38 தொகுதிகளுக்கும் கடந்த நவ.20 சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 67.74 சதவீதம் ஆகும். இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளராக கருதப்படுபவர் கல்பனா சோரன். இவர் ஹேமந்த்தின் மனைவி.
கண்டே தொகுதியில் கல்பனா போட்டியிடுகிறார். இவரது குடும்பம் அரசியல் பின்னணியை சேர்ந்தவர் அல்ல. ஹேமந்த் சோரன் சிறைக்கு செல்லும் போதுதான் கல்பனா அரசியலுக்குள் வந்தார். இவர் ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை தொழிலதிபர், தாய் இல்லத்தரசி. இவர் எம்பிஏ பட்டதாரி. கடந்த 2006 ஆம் ஆண்டு ஹேமந்த் சோரனை கல்பனா மணந்தார். இவர்களுக்கு நிகில், அன்ஷ் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
ஹேமந்த் சிறைக்கு சென்ற போது 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கூட கல்பனா தலைமையிலான ஜேஎம்எம் கட்சி இந்தியா கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது. லோக்சபா தேர்தலில் கூட கூட்டணி பேச்சுவார்த்தைகளை எல்லாம் இந்தியா கூட்டணியுடன் நடத்தியது கல்பனா சோரன்தான். இந்த நிலையில் கண்டே தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்ற கல்பனா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் முனியா தேவி போட்டியிட்டார். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் கல்பனா ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் 15ஆவது சுற்றுக்கு மேல் முனியா தேவியை கல்பனா முந்தியுள்ளார்.
21ஆவது மற்றும் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் கல்பனா சோரன் 119372 வாக்குகளையும் மு னியா தேவி 102230 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கல்பனா 17142 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு 3047 பேர் வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications