கலைஞர் டிவி நிர்வாகத்தில் எந்த பங்கும் எனக்கு இல்லை: கனிமொழி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் வாக்குமூலத்தை அளித்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகத்தில் தமக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடியை ஸ்வான் நிறுவனம் கொடுத்தது என்பது சிபிஐ வழக்கு.

இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி நேற்று வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூல விவரம்:
கலைஞர் டிவியில் குறுகிய காலம்தான் இயக்குநராக இருந்தேன். 2007ஆம் ஆண்டு நான் கலைஞர் டிவி இயக்குநர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் எந்த வகையிலும் அதன் நிர்வாக செயல்பாடுகளில் தொடர்பு கொண்டிருக்கவில்லை.
தற்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பண பரிவர்த்தனையானது 2008 மற்றும் 2011ஆம் ஆண்டுகாலத்தில் நடைபெற்றது. அந்த காலத்தில் கலைஞர் டிவியின் நிர்வாகத்தில் எனக்கு எந்த ஒரு பங்குமே இல்லை. இது முழுவதும் கலைஞர் டிவி நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்பட்ட பணபரிவர்த்தனை.
இவ்வாறு கனிமொழி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
'பென் டிரைவ்' வாக்குமூலம்
டெல்லி நீதிமன்றத்தில் நேற்று காலையிலேயே கனிமொழி ஆஜராகிவிட்டார். அவர் தமது வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாக ஒரு 'பென் டிரைவ்'வில் எடுத்து வந்து நீதிபதியிடம் கொடுத்தார்.
அதில் இருந்தவற்றை அங்கிருந்த ஊழியர்கள் பிரிண்ட் எடுத்தனர். பின் அந்த பதில்கள் அடங்கிய அத்தனை பக்கங்களிலும் கனிமொழியிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதனால் ராஜாவைப் போல கூண்டில் நின்று வாய்மொழியாக மற்றும் எழுத்துப் பூர்வமாக கனிமொழி வாக்குமூலம் அளிக்கவில்லை.
இருப்பினும் ஆ. ராசாவைப் போலவே 90% கேள்விகளுக்கு 'தெரியாது என்றே கனிமொழியும் பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. அவரைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் சரத்குமார் ரெட்டியும் தன் வாக்குமூல பதில்களை பென் டிரைவ்'வில் எடுத்து வந்திருந்தார். அவரிடமும் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து பெறப்பட்டது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications