காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்கவே விடமாட்டோம்- கன்னட விவசாயிகள் ஆற்றில் குதித்து போராட்டம்!
மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரைத்திருப்பது கர்நாடகாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க விடமாட்டோம் என ஆற்றில் குதித்து கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடகா அரசு வெறும் 3,000 கன அடி , 4,000 கன அடி நீரைத்தான் திறந்துவிட்டது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீரை கேட்ட நிலையில் இந்த சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்த சொற்ப நீர் திறப்பையும் நேற்றே கர்நாடகா நிறுத்திவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகா பாஜக மற்றும் கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசோ, உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்துக்கு போயுள்ளது. இவ்வழக்கில் கர்நாடகா அரசும் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மனு மீது செப்டம்பர் 21-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்து காவிரி ஒழுங்காற்று குழு நேற்று பரிந்துரைத்தது. இந்த தகவல் வெளியான உடனேயே கர்நாடகாவின் மாண்டியா விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். ஶ்ரீரங்கப்பட்டணத்தில் காவிரி ஆற்றில் குதித்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
VIDEO | A group of farmers holds protest in Karnataka's Mandya against the release of Cauvery river water to Tamil Nadu. pic.twitter.com/XQOexNd7TD
— Press Trust of India (@PTI_News) September 12, 2023
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications