கார்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங்!
-ரிச்சா பாஜ்பாய்
டிராஸ்: இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், இன்று கார்கில் மாவட்டம் டிராஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
கார்கிலில் 1999ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்து 15 வருடங்களாகிறது. இதையொட்டி டிராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு இன்று வருகை தந்தார் ராணுவத் தளபதி பிக்ரம் சிங்.
அங்கு அவர் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்து நாட்டைக் காத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பிலிருந்து ஜூலை 31ம் தேதி பிக்ரம் சிங் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெளரவமாக உணர்கிறேன்
இதுகுறித்து ஒன்இந்தியா சிறப்புச் செய்தியாளர் ரிச்சா பாஜ்பாயிடம் பிக்ரம் சிங் கூறுகையில், நான் ஜூலை 31ம் தேதி ஓய்வு பெறவுள்ளேன். அதற்கு முன்பாக இங்கு வந்து அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக, கெளரவமாக கருதுகிறேன்.

ராணுவம் மாறியுள்ளது
கார்கில் போருக்குப் பின்னர் நமது ராணுவம் பெருமளவில் மாறுதல்களைக் கண்டுள்ளது. இன்னும் சில சவால்கள் நம்மை விட்டுப் போகவில்லை. இருப்பினும் எந்தவிதமான சவாலையும் சமாளிக்கும் வகையில் நமது ராணுவம் தீரத்துடன் உள்ளது.

பாகிஸ்தான் திருந்தவில்லை
ஆனால் போருக்குப் பின்னும் கூட பாகிஸ்தா் திருந்தவில்லை. தொடர்ந்து ஊடுறுவலில் ஈடுபட்டபடிதான் உள்ளனர். போர் நிறுத்த மீறல்களும் தொடரத்தான் செய்கின்றன.

இரவு பகலாக காக்கும் தீரர்கள்
ஆனால் இதை இரவு பகலாக நமது வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தபடி உள்ளனர். அவர்களை வணங்குகிறேன்.

பாதுகாப்புக்கு உத்தரவாதம்
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நான் நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புவது நமது ராணுவத்தின் கையில் நமது மாவீரர்களின் கையில் நமது நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர் என்பதைத்தான் என்றார் பிக்ரம் சிங்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications