மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து 18ம் தேதி கர்நாடகாவில் பந்த்
பெங்களூர்: மேகதூதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து கன்னட அமைப்புகள் வரும் 18ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு விரும்புகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் வரும் 18ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில்,
முழுஅடைப்பு போராட்டத்திற்கு 600 கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்டோ ஓட்டுநர்கள், டிரக் டிரைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
போராட்டத்தால் வரும் 18ம் தேதி கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications