இன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டம்.. காவிரி் பிரச்சினை தொடர்பாக முக்கிய ஆலோசனை #cauvery
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தை அந்த மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். அப்போது காவிரிப் பிரச்சினை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது கர்நாடகத்திற்குப் பாதகமாக அமைந்துள்ளது. மேலும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்திலும் இன்று முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே, கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் வன்முறை அதிகரித்துள்ளது.
தமிழர் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. தமிழர்களின் வாகனங்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தை அந்த மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். இன்று முற்பகல் 11.30 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications