For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவில் பரபரப்பு.. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் சொகுசு கார் மோதி ஒருவர் பலி

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மடப்புரா பகுதியில், நேற்று இரவு எடியூரப்பா மகன் ராகவேந்திரா எஸ்யூவி வகை சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையைக் கடக்க முயன்றவர் மீது சொகுசு கார் மோதியது.

 Karnataka former CM Yeddyurappa son's car met with an accident Pedestrian died

இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் அங்கேயே மரணமடைந்தார். இந்த சம்பவம் மடப்புரா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்துகிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக சார்பில் ஷிமோகா லோக்சபா தொகுதி எம்பியாக ராகவேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது அந்த தொகுதி எம்பியாக எடியூரப்பா பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka Former CM Yeddyurappa's son Raghavendra was travelling in the SUV car met with an accident one person died at Madapura.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X