கர்நாடக அமைச்சரவை வரும் 21-ல் கூடுகிறது... ஜெ. வழக்கில் அப்பீல் பற்றி முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை வரும் 21 ஆம் தேதி கூடுகிறது. இக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கர்நாடக சட்டத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆகியோரிடம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை கேட்டுள்ளார்.

Karnataka ministry to gets meet on coming 21 st to go appeal on jayalalitha case

சுமார் 900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும் பணிகளில் மூவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று பேரின் அறிக்கை கிடைத்த பிறகுதான் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சொத்துக் குவிப்பு மேல் முறையீடு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+