காண்டான காத்மாண்டு.. நேபாளத்தில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பில்ல பாஸ்.. முறையான எதிர்ப்பு
காத்மாண்டு: நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டமிட்டு வருவதாக பேசிய திரிபுரா முதல்வர் கருத்துக்கு நேபாள அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "உள்துறை அமைச்சரான அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவராக இருந்தபோது, அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்" என்று கூறினார்.

நடவடிக்கை எடுங்க
திரிபுரா முதல்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசியிருக்கும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின.

ஆட்சேபத்துக்கு உரியது
இந்நிலையில், திரிபுரா முதல்வர் விப்லாப் தேவ் பேச்சு ஆட்சேபத்துக்கு உரியது என்று இந்தியாவுக்கான நேபாள தூதர் நிலம்பர் ஆச்சார்யா கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் அரிந்தம் பக்க்ஷியை தொடர்பு கொண்ட நேபாள தூதர் தமது நாட்டின் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு
இந்த சூழலில், திரிபுரா முதல்வர் கருத்துக்கு நேபாள அரசு முறையாக தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தனது ட்விட்டரில், "முறையான ஆட்சேபனை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் வேலைக்கு ஆகாது
அதேபோல், திரிபுரா முதல்வர் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சீஹேவா, "எந்தவொரு இலங்கை அரசியல் கட்சி அல்லது குழுவும் வெளிநாடுகளில் எந்தவொரு கட்சியுடனும் அல்லது எந்தவொரு குழுவுடனும் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், எங்கள் தேர்தல் சட்டங்கள், வெளிநாட்டு அரசியல் கட்சிகளை இங்கு வேலை செய்ய அனுமதிக்கவில்லை" என்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications