காஷ்மீர் சிறுமி பலாத்காரம்.. தானாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் விசாரணை.. பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ்
Recommended Video

டெல்லி: காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இந்திய பார் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வழக்கை தானாக முன்வந்து (suo motu) விசாரணைக்கு எடுத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் போலீசாருக்கு முட்டுக்கட்டை போட்டதாக காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் இந்திய பார் கவுன்சில், ஜம்மு மற்றும் காஷ்மீர் பார் கவுன்சில், கதுவா பார் அசோஷியேஷன் ஆகியவற்றுக்கு, சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் 19ம் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications