சரி..சரி மோடிக்கு எதிரான ஆதாரத்தை வெளியிடுங்க.. ராகுலுடன் மல்லுக்கட்டும் கேஜ்ரிவால்!
மோடிக்கு எதிரான ஆதாரத்தை ராகுல் ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார் கேஜ்ரிவால். பாஜகவும் காங்கிரஸும் ஊழல் ஆதாரங்களை ஒருபோதும் வெளியிடப்போவதில்லை எனவும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக தம்மிடம் உள்ள ஆதாரத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏன் வெளியிடவில்லை என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மோடி தொடர்பான ஊழல் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை நாடாளுமன்றத்தில் பேச விரும்புகிறேன். ஆனால் என்னைப் பேச விடாமல் தடுக்கிறார்கள் என குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து ட்விட்டரில் கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளதாவது:
ராகுலிடம் உண்மையிலேயே ஆதாரம் இருந்தால் ஏன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் வெளியிடவில்லை?
If Rahul Gandhi actually has papers on Modi ji's personal involvement in corruption, then why doesn't he expose it outside Parl? https://t.co/5xc2WkCd5B
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 14, 2016
ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸுக்கு தொடர்பு என்கிறது பாஜக; ஆனால் சகாரா, பிர்லா நிறுவன ஊழல்களில் பா.ஜ.க.வுக்கு தொடர்பு என்கிறது காங்கிரஸ். ஆனால் 2 கட்சிகளுமே ஆதாரங்களை வெளிப்படுத்துவதில்லை.
இவ்வாறு கேஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.