2015: மோடி சூறாவளியை டெல்லி, பீகாரில் துடைத்தெறிந்த கேஜ்ரிவால், நிதிஷ்குமார் சுனாமி பேரலைகள்
டெல்லி/பாட்னா: 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாடெங்கும் வீசிய மோடி அலையை டெல்லி, பீகார் மாநில சட்டசபை தேர்தல்களில் கேஜ்ரிவால், நிதிஷ்குமார் எனும் சுனாமி பேரலைகள் துடைத்தெறிந்த ஆண்டுதான் 2015.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நரேந்திர மோடியை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய வரலாற்றில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக 282 இடங்களைப் பெற்றது பா.ஜ.க. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இந்த வெற்றிக்கு காரணம் என பெருமிதமாக கூறப்பட்டது.

60 ஆண்டுகாலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியோ 44 இடங்களில் மட்டுமே வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த மோடி அலையெல்லாம் கொஞ்ச காலம்தான்... 2015ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே டெல்லி சட்டசபை தேர்தலில் வீசிய கேஜ்ரிவால் சுனாமியில் துடைத்தெறியப்பட்டுவிட்டது. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
அந்த வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பல அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பெறும் என கணித்திருந்தன; ஆனால் சில கருத்து கணிப்புகளோ பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும் என ஆரூடம் கூறியிருந்தன. பிப்ரவரி 10-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. நாடே பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனது.
ஆம் டெல்லி சட்டசபையின் மொத்தம் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. வெறும் 3 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது. டெல்லியில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்குப் போனது. 2014ஆம் ஆண்டு நாடெங்கும் வீசியதாக சொல்லப்பட்ட மோடி அலைக்கு விழுந்த முதல் மரண அடி.
அதன் பின்னர் பீகார் மாநில சட்டசபை தேர்தல் கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. பீகார் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த லாலுவும் நிதிஷ்குமாரும் கை கோர்க்க இவர்களது அணியில் காங்கிரஸும் இணைந்து கொண்டது. பிரதமர் மோடியும் களத்துக்கு வந்து பிரசாரம் செய்து பார்த்தார். வழக்கம் போல கருத்து கணிப்புகள் பெரும்பாலானவை பா.ஜ.கதான் ஆட்சியைக் கைப்பற்றும் என களிப்புடன் ஆரூடம் கணித்தன. ஒரு சில ஊடகங்கள்தான் லாலு-நிதிஷ் அணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் என கணித்திருந்தன.
தேர்தல் முடிவுகளும் வெளியாகின... தேர்தல் முடிவின் தொடக்கத்தில் பா.ஜ.க.தான் அமோக வெற்றி பெறுவதாக அனைத்து ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக கூறின... ஆனால் கள யதார்த்தமோ வேறு மாதிரியாக இருந்தது. லாலு- நிதிஷ்குமார்- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. மொத்தம் 178 இடங்களை இந்த அணி வெல்ல பாஜகவால் வெறும் 53 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
ஆம்
2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் வீசியதாக சொல்லப்பட்ட மோடி அலையை கேஜ்ரிவால், நிதிஷ் சுனாமி பேரலைகள் துடைத்தெறிந்த ஆண்டுதான் 2015!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications