Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன கொடுமை பாருங்க.. கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு.. வாய் வெடித்து துடித்த பரிதாபம்

கர்ப்பிணி பசுக்கு வெடிகுண்டு வைத்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: கேரள யானை மாதிரியே உணவு பொருளில் வெடிகுண்டு வைத்துள்ளனர்.. அந்த யானையை போலவே உணவை சாப்பிட வந்தபோது, வெடி வெடித்து ஒரு பசுவின் வாய் படுகாயமடைந்துள்ளது.. இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.

கேரளாவில் யானை வெடி வைத்து கொன்ற விவகாரமே இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளது.. குற்றவாளிகளை இன்னமும் தேடி வருகிறார்கள்..

ஆரம்பத்தில் யானை மலப்புரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது, பிறகு பாலக்காடு மாவட்டம் என்று அம்மாநில அரசு சொன்னது.. முதலில் அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி வைத்ததாக சொன்னார்கள், விசாரணைக்கு பிறகு தேங்காய்தான் வெடித்தது என்கிறார்கள்.

பசு

பசு

இவைகளை தாண்டி மத ரீதியான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி யானை கொல்லப்பட்ட வழக்கில் தினந்தோறும் புது புது தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், பசுவுக்கும் இதே போல ஒரு நிலைமை நேர்ந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த மே 26-ம் தேதி ஒரு கர்ப்பிணி பசு, கோதுமை மாவை பசிக்காக சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது.

கோதுமை மாவு

கோதுமை மாவு

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், கோதுமை மாவு பந்துக்குள் வெடிகுண்டு வெடித்துள்ளதும்,அதை சாப்பிட வந்தபோதுதான் பசுவின் வாய் சிதைந்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

வெடிகுண்டு

வெடிகுண்டு

இதை பார்த்து கொதித்து போன மக்கள், மாபாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.. கோதுமை மாவில் யார் வெடிகுண்டை வைத்தது என தெரியவில்லை.. பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்றும், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவினை அவர்தான் பசுவுக்கு தந்திருப்பார் என்றும் பசுவின் உரிமையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.

கொடுமை

கொடுமை

எனினும் உண்மைதன்மையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.. தங்கள் விவசாய பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதாலேயே இவ்வாறு கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யானையை அடுத்து பசுவுக்கும் வெடிகுண்டு வைத்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+