இரவோடு இரவாக கேரள அரசின் வெப்சைட்டை ஹேக் செய்த பாகிஸ்தான் ஹேக்கர்கள்
திருவனந்தபுரம்: பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் கேரள அரசின் இணையதளமான www.keralagov.in-ஐ சனிக்கிழமை இரவு ஹேக் செய்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் கேரள அரசின் இணையதளமான www.keralagov.in-ஐ சனிக்கிழமை இரவு ஹேக் செய்துள்ளனர். அவர்கள் அரசு இணையதளத்தில் எரிந்து கொண்டிருக்கும் இந்திய தேசியக் கொடியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில வசனங்களையும் அந்த இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். தங்களை பாகிஸ்தானியர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஹேக் செய்யப்பட்ட இணையதளத்தை கேரள அரசுக்கு சொந்தமான இமேஜிங் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சரி செய்து வருகிறது. ஹேக்கர்கள் அரசு இணையதளத்தின் சர்வரை ஹேக் செய்யவில்லை என்கிறது அந்த மையம்.
இது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று கூறுகையில்,
கேரள அரசின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான பிரச்சனை ஆகும் என்றார்.
இந்த சம்பவம் பற்றி சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.