Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 லட்சம் பெங்காலிகளை நம்பி கேரள தேர்தல் களத்தில் குதிக்கும் மமதா பானர்ஜி!

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளாவில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்து வரும் 15 லட்சம் பெங்காலிகளை நமபி, மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் அங்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளிலும் மமதா கட்சி போட்டியிடுகிறது.

முதல் கட்டமாக 70 தொகுதிகளின் வேட்பாளர்களை நேற்று கட்சியின் கேரள மாநிலத் தலைவர் மனோஜ் சங்கரநல்லூர் அறிவித்தார்.

மேலும் மமதா பானர்ஜி தேர்தல் பிரசாரத்திற்காக வரவுள்ளதாகவும் மனோஜ் சங்கரநல்லூர் கூறினார்.

காங் -கம்யூ கூட்டணியை அம்பலப்படுத்த

காங் -கம்யூ கூட்டணியை அம்பலப்படுத்த

இதுகுறித்து மனோஜ் சங்கரநல்லூர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் கேரளாவில் தனித்துப் போட்டியிடுகின்றன. ஆனால் மேற்கு வங்கத்தில் இரண்டும் கை கோர்த்துள்ளன.

புனிதமற்ற

புனிதமற்ற

இந்தக் கூட்டணி புனிதமற்றது. இதை கேரள மக்களிடம் அம்பலப்படுத்தவே எங்களது கட்சி இங்கு போட்டியிடுகிறது. கேரளாவிலும் கூட இவர்கள் ரகசிய உறவு வைத்துள்ளனர்.

3 ஊர்களில் பிரசாரம்

3 ஊர்களில் பிரசாரம்

மமதா பானர்ஜி ஏப்ரல் மாதம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பார்.

2 லட்சம் தொண்டர்கள்

2 லட்சம் தொண்டர்கள்

கேரளாவில் திரினமூல் காங்கிரஸுக்கு 2 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். மேலும், 15 லட்சம் பெங்காலிகளும் இங்கு பல்வேறு வேலையில் உள்ளனர். அவர்களும் ஆதரிப்பார்கள்.

ஜெயிக்க முடியாது

ஜெயிக்க முடியாது

எங்களால் இங்கு ஜெயிக்க முடியாது என்றாலும் கூட சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவெடுப்போம் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+