200 கி.மீ. தூரம்.. சொகுசு காரில் 1 மாதம் தங்கி.. வாவா சுரேஷுக்கே டிமிக்கி கொடுத்த 10 அடி ராஜநாகம்
கோட்டயம்: கேரளா மாநிலத்தில் ஒரு வாரமாக 200 கி.மீ. தூரம் பயணித்த ராஜநாகம் ஒன்று வனத்துறையினரால் பிடிபட்டது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சுஜித். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு காரில் மலப்புரம், வழிக்கடவு சென்றார், அப்போது தான் ஓட்டி வந்த காரை அடர்ந்த காட்டு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த காரில் ஒரு ராஜநாகம் ஏறிக் கொண்டது. இதை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். உடனே சுஜித்திடம் கூறினர். அவரும் வனத்துறையினரை வரவழைத்து தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

பாம்பு
பாம்பு காரினுள் போயிருக்கலாம். ஆனால் அங்கு தனக்கு எந்த இரையும் கிடைக்கவில்லை என்பதை வெளியேறி காட்டுக்குள் போயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அரை மனதுடன் காரை எடுத்துக் கொண்டு கோட்டயத்திற்கு வந்தார்.

பாம்பு பயம்
எனினும் அவருக்கு பாம்பு பயம் இருந்து கொண்டே இருந்தது. இதையடுத்து காரை சர்வீஸ் விட்டு பார்த்தார். அப்போது அந்த பாம்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பாம்பு அதிகாரிகள் சொன்னது போல் போய்விட்டதாக கருதிய சுஜித் ஒரு மாதகாலமாக தனது மனைவி குழந்தைகளுடன் அதே காரில் 200 கி.மீ. தூரம் பயணித்துள்ளார்.

10 நாட்கள்
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காருக்குள் பாம்பின் சட்டை கழற்றப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை அழைத்து காரை முற்றிலுமாக பரிசோதனை செய்தார். அப்போதும் பாம்பு தென்படவில்லை.

சுஜித் வீடு
இந்த நிலையில் சுஜித்தின் வீட்டருகே பெரிய பாம்பு ஊர்ந்து சென்றதை கண்ட சுஜித், உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்தார். அவர்கள் வந்து 10 அடி நீள பாம்பை பிடித்தனர். மீண்டும் வழிக்கடவு வனப்பகுதிக்கே கொண்டு போய் விட்டனர். ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் பயணம் மேற்கொண்ட ராஜநாகத்தை நினைத்து சுஜித் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு வேளை யாரையாவது தீண்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும். மிக கொடூரமான விஷப்பாம்பு என்பதால் நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications